மாணவிக்கு மார்பிங் படத்தை அனுப்பி காதல் தொல்லை; வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


மார்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மாணவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த முருங்கபட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அப்பிச்சிகுமார் . 19 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பள்ளியில் படித்தபோது ஒரு மாணவியுடன் பழகி  இருவரும் காதலித்ததாக தெரிகிறது. அப்போது அந்த மாணவி அப்பிச்சிகுமாருக்கு சக தோழியுடன் உள்ள புகைப்படங்களை  அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து கணவன்-மனைவி போல் மாணவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அப்பிச்சிகுமாரை விட்டு விலகி செல்ல  அப்பிச்சிக்குமார் காதலிக்க வற்புறுத்தி வந்ததுடன் மார்பிங் செய்த புகைப்படங்களை  சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தன்  பேரில் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பிச்சிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student sent a bullying picture to a girl Youth arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->