சாங்கியம் செய்ய ஆற்றங்கரைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! புகார் அளித்த தாய்! - Seithipunal
Seithipunal


கரூர், குளித்தலை அருகே மேலதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் தீபக் (வயது 14) இவர் வேங்காம்பட்டியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த ஆண்டு ஜோதியின் உறவினர் மகன் இறந்ததால் அவருக்கு சாங்கியம் செய்வதற்காக உறவினர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரைக்கு நேற்று சென்றனர். 

அனைவரும் காவேரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் இறங்கி குளித்த தீபக் திடீரென தண்ணீரில் மூழ்கினார். 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆற்றில் மூழ்கிய தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோதி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

student drowned Cauvery river


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->