இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் - நெடுந்தீவு அருகே 19 தமிழக மீனவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் - நெடுந்தீவு அருகே 19 தமிழக மீனவர்கள் கைது.!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து 19 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் தமிழக அரசும், மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்களை நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilangan navy arrested 19 tamilnadu fishermans in nedundivu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->