போக்சோவில் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது: பள்ளிக்கல்வி துறை தகவல்!
So far 350 teachers have been arrested in POCSO Information from the school education department
தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீப காலமாக சிறிய பெண்கள் முதல் பெரிய பெண்கள் வரை பாலில் தொல்லையானது அளிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக வேலியே பயிரை மேயும் கதையாக படிப்பு சொல்லி கொடுக்கும் ஆசிரியர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வது தொடர் கதையாகிவருகிற்து.
சட்டங்கள் கடுமையான தண்டனை வழங்கினாலும் ஒரு சில இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது,அந்த வகையில் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதில், 50 ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்மேலும், மாணவிகளை ஆசிரியர்கள் குழந்தைகளாக பாவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்றும் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
So far 350 teachers have been arrested in POCSO Information from the school education department