பிறந்த நாளில் நேர்ந்த சோகம் - சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன். இவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பதால், சென்னை வடபழனி, மன்னார் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் மனைவி பதுமேகலா தங்கி இருந்து கவனித்து வந்தார். இவருடைய மகள்  சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் வந்ததால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சென்னைக்கு வந்தார். இதையடுத்து தாய் பதுமேகலா, மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக  கடற்கரைக்கு அழைத்து சென்று அங்கு பொறித்த மீன், சிக்கன் ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்தார்.

இதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் பதுமலா மகளை எழுப்பியபோது எந்தவித அசைவும் இல்லாமல் வாய், மூக்கில் ரத்தம் கசிந்த படி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார் சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six years old girl died for eat chicken rice


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->