வேலூரில் அதிர்ச்சி : பாதுகாவலர்களைத் தாக்கிவிட்டு 6 சிறார்கள் தப்பியோட்டம் .! - Seithipunal
Seithipunal


வேலூரில் அதிர்ச்சி : பாதுகாவலர்களைத் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்ற 6 சிறார்கள் .!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காகிதப்பட்டறையில் சமூக நலத்துறையின் கீழ் அரசினர் சிறார் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில்  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் கைதிகள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்த சிறுவர்களில் 6 பேர் நேற்று இரவு இல்லத்தில் இருந்த பாதுகாவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இந்த தாக்குதலில் மூன்று பாதுகாவலர்களும் காயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த மற்ற ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பாதுகாவலர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தப்பியோடிய சிறுவர்களில் இரண்டு பேரை பிடித்தனர். 

மேலும், மீதமுள்ள நான்கு பேரையும் தேடி வருகின்றனர். அரசு சிறார் இல்லத்தில் பாதுகாவலர்களைத் தாக்கி விட்டு சிறார்கள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six childrens escaped in vellore govt home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->