வீடு புகுந்து கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - நாடக காதலன் தற்கொலை! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை பகுதியில் கல்லூரி மாணவியை, அவரின் வீடு புகுந்து அரிவாள் மனையால் கழுத்தறுத்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்துஉள்ளார்.

பின்னர் அங்கு கிடந்த பாட்டிலால் தன்னைத்தானே அந்த இளைஞர் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருவரின் உடலையும் மீட்டு பிறகு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு இடையே வெளியான முதல் கட்ட தகவலின் படி, பிரான்மலை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் ஆகாஷ், கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களின் காதலுக்கும். திருமணத்திற்கும் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivagangai College girl hacked to death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->