மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


சேலம், எடப்பாடி அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 78). இவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர். இவரது மனைவி லட்சுமி (வயது 75). 

இவர்களுக்கு ராஜா, ஜெயக்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கந்தசாமி வழக்கம் போல் நேற்றிரவு சாப்பிட்டுவிட்டு லட்சுமி உடன் ஒரு அறையிலும் அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தனர். 

இன்று அதிகாலை 2 மணி அளவில் கந்தசாமி அவரது அருகில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார். இதில் லட்சுமி வலியில் கதறி துடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

 

இந்த சத்தம் கேட்டு வந்த அவரது மகன்கள் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமிக்கு கடந்து சில ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam husband arrested for wife murder case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->