பல்லடம் அருகே பரபரப்பு - ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மாயம்.!
school students missing in tirupur palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேகாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகள் அபிபாரதி மற்றும் ஞானமூர்த்தி மகள் கவுரி உள்ளிட்ட இருவரும், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 26 ம் தேதி அன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். அதன் பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பள்ளிக்குச் சென்ற பெற்றோர் ஆசிரியர்களிடம் விசாரித்தபோது தான் அவர்கள் அன்று பள்ளிக்கே வரவில்லை என்பது தெரிய வந்தது.

இதைக்கேட்டு பதறிப்போன அவர்கள், சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தியதில் மாணவிகள் இருவரும் அவர்களது தோழிகள் யாமினி, ராஜஸ்ரீ உடன் பள்ளிக்குச் செல்லாமல் யாமினியின் வீட்டில் இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து ராஜஸ்ரீ மட்டும் பள்ளிக்குச் செல்ல, மற்ற மூன்று பெரும் யாமினி வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து அபிபாரதியும், கவுரியும் வீட்டிற்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார்கள். இதையடுத்து போலீசார் மாயமான மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school students missing in tirupur palladam