சக நண்பனின் தந்தையை வெட்டிக்கொன்ற பள்ளி மாணவர்கள் - தூத்துக்குடியில் அதிர்ச்சி - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் நாதன்- செல்வி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் செந்தில்நாதன் ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி அருகே முறுக்கு கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரம் செய்துகொண்டிருந்த போது மூன்று பேர் திடீரென கடைக்குள் புகுந்து அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து  தகவல் லறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த கொலை சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர்.

மேலும் போலீசார் குற்றவாளியான மற்றொரு நபரையும், இவர்களை குற்றம் செய்ய தூண்டி விட்டவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கி டையே போலீசார் கைது செய்த நபர்களிடம் நடத்திய  விசாரணையில் செந்தில்நாதனின் மகனுக்கும் சக மாணவருக்கும் ஏற்பட்ட விரோதத்தில் செந்தில்நாதன் தன் மகனுக்கு ஆதரவாக பேசியதால் ஆத்திரமடைந்த  மாணவன் நண்பர்களுடன் சேர்ந்து செந்தில் நாதனை கொலை செய்தது தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school students arrested for murder case in thoothukudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->