அடுத்தடுத்து மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் - திருவள்ளூரில் பரபரப்பு.!!
school students admitted hospital for suddenly faint in thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகை பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி இன்று வழக்கம் போல் இயங்கிய நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, திடீரென மாணவிகளிடையே மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும், ஆசிரியர்களும் மயக்கமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவர்கள் மயங்கியது குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளியை சுற்றி உள்ள தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பல முறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அந்த தொழிற்சாலைகளை முறையாக உரிய வழிகாட்டுதல்களுடன் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூச்சுத்தி திணறலால் மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school students admitted hospital for suddenly faint in thiruvallur