ராமநாதபுரம் - மாணவியுடன் பேசியதைக் கண்டித்த ஆசிரியர் - மாணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் - மாணவியுடன் பேசியதைக் கண்டித்த ஆசிரியர் - மாணவன் எடுத்த விபரீத முடிவு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழகர்சாமி-கற்பகம் தம்பதியினர். இவர்களுடைய மகன் அஜய். இவர் சிகே மங்கலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், அஜய் கடந்த 15 ஆம் தேதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவருடைய தாய் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். அப்போது, அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வேலைக்கு சென்ற கற்பகம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது கதவு அடைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த கற்பகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

அப்போது மாணவர் அஜய் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், ‘சக மாணவியோடு பேசியதை ஜூலி டீச்சர் என்னை தவறாக நினைத்து கண்டித்தார். எனக்கு இவ்வுலகில் வாழப் பிடிக்கவில்லை. இதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்’என்று எழுதப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவலளித்தனர். அதன் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in ramanathapuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->