செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த பெற்றோர் - ஆத்திரத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த பெற்றோர் - ஆத்திரத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மார்ச் செல்வன்-கலைச்செல்வி தம்பதியினர். இவர்களது மகள் ஸ்ருதி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

தற்போது தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு நடந்து முடிந்துவிட்ட நிலையில் ஸ்ருதி சதா வீட்டில் எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்ட படி இருந்துள்ளார். இதைபார்த்த அவரது பெற்றோர்கள் ஸ்ருதியை கண்டித்துள்ளனர். 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ருதி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து ஸ்ருதி மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student sucide for upset in tenkasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->