தி.மலை | பள்ளி மாணவி பிணமாக மீட்பு! நாடக காதலனின் அதிர்ச்சி வாக்குமூலத்தால் பதறி போன போலீசார்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை, வந்தவாசி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் மாரி. இவரது மகள் ரேணுகா (வயது 14) இவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

அதே பகுதியைச் சேர்ந்த நீலமேகம் மகன் யோகேஸ்வரன் (வயது 21) இவர் இரு சக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரேணுகா மற்றும் யோகேஸ்வரன் இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ரேணுகா வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். மேலும் ரேணுகாவின் செல்போனை சோதனை செய்தபோது ரேணுகா கடைசியாக யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் யோகேஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் யோகேஸ்வரனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் யோகேஸ்வரன் ரேணுகாவை கொலை செய்து விட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து யோகேஸ்வரன் போலீசாரை அருகில் இருந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதரில் ரேணுகா பிணமாக கிடந்தார். போலீசார் உடனடியாக ரேணுகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக யோகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக ரேணுகாவை லோகேஸ்வரன் காதலித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தனிமையில் சென்ற ரேணுகாவை யோகேஸ்வரன் மடக்கி அவரிடம் தகராறு ஈடுபட்டு தாக்கியுள்ளார். 

மேலும் ரேணுகாவின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்து முற்புதரில் மறைத்து வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student murdered young man arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->