நீலகிரியில் சோகம் - பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி படித்து வந்த கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி லயா பரிதாபமாக உயிரிழந்தார். 

அதாவது சிறுமி லயா பள்ளி முடிந்து பேருந்தில் இருந்து கீழே இறங்கி பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார். அதனை சிறிதும் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கியபோது சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடிய ஓட்டுநர் தியாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நான்கு வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student died in nilgri for accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->