பரமக்குடி - ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் ஜாமீன் மனு தள்ளுபடி.! - Seithipunal
Seithipunal


பரமக்குடி - ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க நகர் அவைத் தலைவரும் நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றவாளியான ராஜாமுகம்மது தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசு தரப்பில், இந்த வழக்கின் விசாரணை இறுதி நிலையில் உள்ளது. 

இதற்கான இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். சி.சி.டி.வி காட்சி பதிவுகள், லாட்ஜ் ஆவண பதிவுகளில் ராஜாமுகம்மது அங்கு வந்து சென்றதற்கான குறிப்புகள் உள்ளன. இந்நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். 

ஆகவே, ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராஜாமுகம்மதுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl gang rape case accuest bail dismissed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->