#திடீர்திருப்பம் || இறுதித்தேர்வு உண்டு., சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி.!
School exam some news april
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று நேற்று செய்தி பரவியது. இதனை பள்ளி கல்வித்துறை வெளியிட்டதாவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என்ற செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் இதனை உறுதி செய்து உள்ளார். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
School exam some news april