மழை பாதிப்பு - விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான பெஞ்ஜல் புயலின் தாக்கத்தால், விழுப்புரம் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 30, 1-ந் தேதி என்று 2 நாட்கள் தொடர்ந்து இடைவிடாது பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 

இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதன் காரணமாக இம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். மேலும், திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school and college leave in vilupuram district for flood


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->