#BigBreaking | சேலத்தில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கூட்டாக தற்கொலை முயற்சி - வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


சேலம் வாழப்பாடி அருகே, அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் கூட்டாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் 4 பேர், நான்கு நாள் விடுமுறையை முன்னிட்டு விடுதியில், வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது நண்பர்களின் இல்லத்திற்கு சென்றதாக தெரிகிறது.

நேற்று பள்ளி திறந்த நிலையில், மாணவியின் பெற்றோர்களுக்கு மாணவி விடுதியில் இருந்து காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவிகளிடம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விசாரணை செய்து கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் நான்கு பேரும், விடுதியில் இருந்த எலி பேஸ்ட்டை உண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நான்கு மாணவிகளும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem puthupalaiyam school girls attempt suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->