தலை நசுங்கி பலியான டாஸ்மாக் வாடிக்கையாளர்! எமனாக மதுபோதை! ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் கைது!
Salem Omalur Bus Accident One dead
சேலத்தில் மது போதையில் மூவர் தகராறில் ஈடுபட்டபோது, நிலைதடுமாறி ஒருவர் சாலையில் விழுந்து, அவர் மீது தனியார் பேருந்து ஏறி இறங்கியதில், அவர் தலைநகசிங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாது. கூலித் தொழிலாளர் இவர் கட்டுமான பணி ஒன்றாக சேலம், ஓமலூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று இரவு மாதுவும் அவருடன் பணிபுரியும் சக ஊழியரான காமராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகிய மூவரும், ஓமலூர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.
பின்னர் தர்மபுரி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்திய போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும், ஹோட்டலில் இருந்து அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு மூவரும் சாலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில், எதிர்பாராத விதமாக மாது தர்மபுரி செல்லும் பிரதான சாலையில் விழுந்தார். அந்நேரம் அந்த வழியாக சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்து மாதுவின் தலை மீது ஏறி இறங்கியது.
இதில் தலை நசுங்கி மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாதுவின் சக ஊழியர்களான காமராஜ், செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தனியார் பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடமும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Salem Omalur Bus Accident One dead