பழனி முருகன் கோவிலில் "ரோப் கார் சேவை" நாளை நிறுத்தம்...! - Seithipunal
Seithipunal


பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் சேவை நாளை இயங்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் "பழனி முருகன் கோவில்" முன்றாவது படை வீடு ஆகும். இது பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும்.

பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று வர ரோப் கார், மின்இழுவை ரயில் சேவைகளும் உள்ளன. இதில் ரோப் காரில் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிசெய்யும் வகையில், கோயில் நிர்வாகம் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும். 

அந்த வகையில், நாளை பழனி ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரோப்கார் சேவை நாளை இயங்காது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பழனிக்கு வரும் பக்தர்கள் படி பாதை வழியாக அல்லது மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rope car service will stop at Palani Murugan temple tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->