பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்க்கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். ஆறுபடை வீடு கொண்ட ஒரே கடவுள் என்ற பெருமையை உடையவர். அதில், மிகவும் புகழ்பெற்ற மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

அப்படி வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை தான் பிரதான வழியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.

 இவற்றில், மிக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை தேர்வு செய்கின்றனர். 

இந்த நிலையில், பக்தர்கள் பாதுகாப்புக்காக மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் இந்த ரோப்கார் நிலையத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த பனியின் போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். 

அந்த வகையில், இன்று பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ரோப்கார் சேவை இன்று ஒருநாள் நிறுத்தப்படுகிறது. 

ஆகவே, பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rope car service stop at palani murugan temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->