பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்! துப்புதுலக்கும் போலீசார்!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50) இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய துணைத் தலைவராக உள்ளார். 

தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார். 

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.11,000, 9 பட்டு புடவைகள் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். 

தரிசனம் முடித்துவிட்டு இன்று வீடு திரும்பிய பாபு வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி உள்ளே நுழைந்து பார்த்தபோது நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

உடனடியாக இதுகுறித்து அரக்கோணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ranipettai BJP celebrity house robbery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->