சாலையோர பள்ளத்தில் உயிரிழந்து கிடந்த போலீஸ்காரர்! பொதுமக்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை, நெமிலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் இளங்கோ (வயது 29). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வந்தார். 

இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கல்பாலம்பட்டு ஏரி அருகே சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 

தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பள்ளத்தில் மழை நீர் நிரம்பி இருந்தது. இதனை கவனிக்காத இளங்கோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.

 

இதில் பலத்த காயமடைந்த இளங்கோ மயக்கம் அடைந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை. 

இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசார் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் கிடந்த பள்ளத்தில் போலீஸ்காரர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranipet policeman died roadside ditch


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->