செல்பி மோகம்.. 7-வது நாளாக தேடி அழுகிய நிலையில் இளைஞர் உடல் கண்டெடுப்பு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை பகுதிக்கு அருகே இருக்கும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி, பரமக்குடியை சேர்ந்த 28 வயது என்ஜினீயர் அஜித்பாண்டியன் தவறி விழுந்துள்ளார். அப்போழுது அவர் நீரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். 

இதனை தொடர்ந்து, அவரை தேடுகின்ற பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், 5 நாட்களாக அவரை தேடியும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தகைய நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் அவரை தேடுகின்ற பணி நடைபெற்றது. அப்பொழுது ஓடையில் தண்ணீர் அதிக அதிகளவு சென்றது. 

ஆனாலும், கயிறு கட்டி, ஓடையில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் தேடுகின்ற பணியில் ஈடுபட்டனர். ஆற்று கரை ஓரப் பகுதியில் சுமார் 3 கி.மீ தூரத்தில் நடந்து சென்று அவர்கள் தேடியுள்ளனர். ஆனால், நேற்று மாலை வரை தேடியும் கூட அவரது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 7-வது நாளாக இன்றும் அவரை தேடும் பணி நடந்து வந்தது.

இத்தகைய சூழலில், தாண்டிகுடி அருகே மீனாட்சி ஊத்து என்ற பகுதியில் பாறைக்களுக்கிடையில் அழுகிய நிலையில், உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்த காரணத்தால் தற்போது உடலை மேலே இழுக்க தீயணைப்பு படையினர் முயற்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramanadhapuram youngster body found after 7 years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->