மே 21ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மே 21ஆம் தேதி ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மே 21 ஆம் தேதி வருகை தந்தார். அப்போது அங்கு நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

 இதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் வரும் மே 21ம் தேதி மரியாதை செலுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்து உள்ளார்.

 முன்னதாக பெங்களூருவில் நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மே 20ம் தேதி பங்கேற்க உள்ளார். அதன் பிறகு கர்நாடகாவில் இருந்து சென்னை வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi comes to tamilnadu in May 21


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->