ராமேஸ்வரம் || தொடர் கைது - போராட்டத்தில் மீனவர்கள் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு.!  - Seithipunal
Seithipunal


கடந்த 9-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

இதையடுத்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி, 23 மீனவர்களையும் வருகிற 25-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் படி 23 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாம்பன் சாலை பாலத்தில் விசைப்படகு மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மீனவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pushinng between police and fisherman in rameshwaram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->