புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் தற்கொலை - வெளியான பகிர் தகவல்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் தற்கொலை - வெளியான பகிர் தகவல்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அருகே மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி-விஜயா தம்பதியினர். இவர்களது மகன் அரவிந்தன் என்பவருக்கும் நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று, தற்போது நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், நாகேஸ்வரியின் கணவர் அரவிந்தன், மாமியார், மாமனார் மற்றும் உறவினர் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு நாகேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். ஏற்கனவே நாகேஸ்வரியின் பெற்றோர் 15 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் நாகேஸ்வரியின் கணவர் வீட்டில் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொடுமையை தாங்க முடியாமல் நேற்று நாகேஸ்வரி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையறிந்த அவரது கணவர் அரவிந்தன் நாகேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அதன் பின்னர் இதுகுறித்த தகவலை நாகேஸ்வரியின் உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு நாகேஸ்வரி உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நாகேஸ்வரியின் உறவினர்கள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

இந்த புகாரின் படி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து வழக்கை விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையே நாகேஸ்வரியின் உறவினர்கள் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ள நாகேஸ்வரியின் கணவர், மாமனார், மாமியார் கணவரின் மாமா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தலைமறைவாக உள்ள நான்கு போரையும் நிச்சயம் கைது செய்வோம் என்று உறுதி அளித்ததை அடுத்து நாகேஸ்வரி மற்றும் குழந்தையின் சடலத்தை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnent lady sucide for dowry in putukottai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->