அயனாவரத்தில் சீருடையுடன் காவலர் தூக்கிட்டு தற்கொலை.!!
Policeman in uniform hanged himself in Ayanavaram
சென்னை அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றி வரும் அருண்குமார் சீருடை உடன் வேலைக்கு செல்வதற்காக கிளம்பிய அருண்குமார் திடீரென வீடு திரும்பிய நிலையில் சீருடை உடனேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட அருண்குமாரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சீருடை உடன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Policeman in uniform hanged himself in Ayanavaram