வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிப்பு, மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை, குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் அவினாஷ்.  இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவதன்று வழக்கம் போல பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது, நன்மங்கலம்-குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டுக்கு திரும்பியபோது 2 பேர் அவரை வழிமறித்து நிறுத்தி, வண்டி பழுதாகி விட்டது என கூறியுள்ளனர்.

பேசி கொண்டிருக்கும் போதே அவர் மீது மிளகாய் பொடித்தூவி அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மரம் நபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police Searching the Robbers


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->