ஆபத்திற்கு உதவ வந்த செவிலியர்... செல்போனை அபேஸ் செய்த இளைஞர்... காவல்துறையினர் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் வடுக்கண்தாங்கல் கிராமத்தில் சிகிச்சை அளித்த  செவிலியரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருடி சென்றதால்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடுகண்தாங்கல் என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இங்கு கழுத்து வலி என்று கூறி இளைஞர் ஒருவர் வந்திருக்கிறார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த செவிலியர் மாலதி என்பவர் இளைஞரை பரிசோதனை செய்துள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது செல்போனை மேஜையில் வைத்திருக்கிறார். இதனை கவனித்த இளைஞர் செவிலியரின் செல்போனை  லாவகமாக எடுத்து தனது பையில் வைத்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து செல்போன்  காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த செவிலியர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். அப்போது காவல்துறையினர் சுகாதார நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது  இளைஞர் செல்போனை திருடி தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police looking for a youth who stole nurse cell phone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->