மதுரை || 7 மாத பெண் குழந்தை மரணம்.. உடலை தோண்டி எடுத்து காவல்துறை விசாரணை..!
Police investigation about 7th months old baby
7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி. இவருக்கு திருமணமாகி பாண்டிச் செல்வி என்ற மனைவி இருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த பெண் குழந்தை கடந்த 07.03.2022 தண்ணீரில் வீழ்ந்து உயிரிழந்ததாக கூறி அவர்களின் வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். இதனை அடுத்து, குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாஅக கூறி கிராம நிர்வாக அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து, அந்த குழந்தையின் உடலை தோண்டு எடுத்த காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறந்து ஏழு மாதங்களே ஆன பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
Police investigation about 7th months old baby