பிளஸ்-1 மாணவியை காதலித்த +2 மாணவன் வெட்டி படுகொலை.! பெண்ணின் பெற்றோர் வெறிச்செயல்.? தேனியில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் வீரசின்னம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 12ம் வகுப்பு மாணவன் கமலேஷ்வரன். இவர் போடேந்திபுரம் பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், பெண்ணின் பெற்றோர் கமலேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற கமலேஷ்வரன் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கல்லூரணி பகுதியில் கழுத்து துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கமலேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இது குறித்த விசாரணையில், கமலேஸ்வரனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், கமலேஸ்வரனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார், தலைமறைவாக உள்ள பெண்ணின் பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigating the murder of a twelfth class student in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->