பெண் போலீஸிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 24 வயதான பெண் ஒருவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக தஞ்சாவூருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் பேருந்தில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவருடன் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் சற்குணம் (வயது 32) என்பவர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு கொரடாச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

தன்னுடன் வேலை செய்யும் போலீஸ்காரர் அழைத்து செல்வதாக கூறியதால், அந்த பெண் போலீஸ் கொரடாச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அதன் பின்னர் சற்குணத்துடன் அவர் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அப்போது தண்டலை கிராமம் அருகே சென்ற போது பெண் போலீசுக்கு சற்குனம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் சற்குணத்திடம் இருந்து தப்பித்து அவருடன் பணிபுரியும் மற்றொரு போலீஸ்காரரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

மேலும் அவர் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் அளித்த நிலையில், பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சற்குணம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பெண்ணை துன்புறுத்தல், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தல், பெண்ணை தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சற்குணத்தை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police harassment to female police in thiruvarur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->