நம்பி கடைக்கு வந்த 5ஆம் வகுப்பு மாணவி... முட் புதரில் வைத்து பாலியல் தொந்தரவு... வாலிபருக்கு வலைவீச்சு...!
Police are looking for a youth who sexually harassed a 5th class girl in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் எதிர்வீட்டில் வசித்து வரும் 20 வயது வாலிபருடன் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வர சிறுமியை அனுப்பியுள்ளனர். அப்பொழுது வாலிபர் சிறுமியை கடைக்கு அழைத்துச் செல்லாமல், அப்பகுதியில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள புதரில் வைத்து சிறுமிக்கு வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Police are looking for a youth who sexually harassed a 5th class girl in Tiruvannamalai