குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.! - Seithipunal
Seithipunal


குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் நீர் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

அதன் காரணமாக, மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnicers allowed to Kutralam waterfalls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->