#சற்றுமுன் || கார் மீது லாரி மோதி கொடூர விபத்து., பெரம்பலூர் அருகே பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கார் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 9 பேர் காரில் சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வரும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இவர்களின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம், காரை பிரிவு அருகே உணவகம் ஒன்றுக்கு செல்வதற்காக காரை வளைத்த போது, பூலாம்பாடியிலிருந்து நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி இவர்களின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார்முகில் அவரின் மகன் மற்றும் கண்ணன், தமிழரசு ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் படுகாயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கர சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perampalor car lorry accident april


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->