பெரம்பலூர் | காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில், புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே திருமணம் ஆகி ஒரு மாதத்தில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது:

பெரம்பலூர்: எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 26) கடந்த ஒரு மாதமாக எளம்பலூர் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்தார்.

நேற்று இரவு வீட்டில் தூங்க சென்ற பார்த்திபன் அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு உள்ள மேற்கூரை கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். 

அதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர், பார்த்திபனின் தந்தை லெனின் இந்த சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் பார்த்திபனுக்கு கடந்த மாதம் 10-ந் தேதி காதல் திருமணம் நடந்து குடும்ப பிரச்சனையின் காரணமாக கணவன் -மனைவி இருவரும் சேர்ந்து வாழாததால் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரியவந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur resent married men suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->