இந்தியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..பாஜக முன்னாள் தலைவர் சொல்கிறார்!
People will never accept Hindi says the former leader of BJP
இந்தியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..பாஜக முன்னாள் தலைவர் சொல்கிறார்!
புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத்தில் முதல்வர் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அறிவிப்பு வெளியிட்டு பல மாதங்கள் ஆகியும் அதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.
இந்தி மொழி புதுச்சேரியில் கட்டாயம் இல்லை. அதை ஆதரிக்கிறோம். அதே வேளையில் இந்தி மொழி எதிர்ப்போர் பல இடங்களில் பெயர் பலகைகளில் தமிழ் பெயர் இல்லாமல் முற்றிலும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. அதை அழிக்க ஏன் போராடவில்லை. அதிகாரிகள் உடனடியாக தமிழில் இல்லாத பெயர் பலகைக்கு அபராதம் விதிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் முதன் மொழி தமிழ் என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் மொழி அனைத்து பெயர் பலகையிலும் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள் அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை. உடனடியாக சட்டமன்றத்தில் கூறியதை பெயரளவில் இல்லாமல் அதை நிறைவேற்ற வேண்டும். அதை புதுச்சேரி மாநிலம் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும், முதலில் தமிழ் மொழி இடம் பெற வேண்டும் அல்லது பெயர் பலகை அகற்ற வேண்டும். இந்தி எதிர்ப்போர் தமிழ் எங்கே இல்லையோ அங்கே அவர்கள் குரல் ஒலிக்கவில்லை. அரசு அலுவலகங்களில் அலுவலக மொழி தமிழ் மொழியை கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருகிறது.
புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் தமிழ் மொழியில் இல்லையென்றால் அந்தந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும். மக்களை திருப்திப்படுத்த பேசுவதை விட செயல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கு முன்பு அவருக்கு ஏற்ற இடம் புதுவை என்பதை நிரூபிக்க அரசு அனைத்து பகுதிகளிலும் தமிழ் மொழியை முன்னிறுத்தி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முற்றிலும் தமிழ் மொழி இல்லாத பெயர் பலகைகளை அகற்ற வேண்டும். வெறும் யோகா தினத்துக்கு என் என்று இந்தி மட்டுமே உள்ள பேனர்களை அகற்றிய அமைப்புகள் தமிழே இல்லாத ஆங்கில பெயர் பலகைகளை ஏன் அகற்றவில்லை. தமிழ் வளர்க்க வேண்டும் என்றால் ஒத்த கருத்துடைய வகையில் வேலை செய்ய வேண்டும். உடனடியாக அந்த அமைப்புகள் ஆங்கிலம் மட்டுமே உள்ள போர்டுகளை அகற்ற முயலுமா? அப்பொழுதுதான் தமிழ் மொழி பற்று உள்ளதாக அர்த்தம். மத்தியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் புதுச்சேரியில் இந்தி ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் மொழி நமது அடையாளம் அதை அழிக்க இயலாது அனைவரும் சேர்ந்து தமிழ் மொழி தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க அரசியல் அல்லாத பாடுபட வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
English Summary
People will never accept Hindi says the former leader of BJP