வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்.. நையப்புடைத்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


கத்தியை காட்டி மிரட்டி வழிபறியில் ஈடுப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் அந்த பகுதி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில்ஆர்.பேட்டை என்ற பகுதியில் உள்ள ஆசை தம்பி என்பவருக்கு சொந்தமான கடையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மேல்எடையாளம் என்னும் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பகுதி பொதுமக்கள்  அவரை மடக்கி பிடித்து அவரை தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People attack the thief


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->