வாய்க்கால் புனரமைப்பு பணிகள்.. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!
Oral cavity reconstruction work The opposition leader Siva inaugurated it
வில்லியனூரில் ரூ.93 லட்சம் செலவில் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட "வில்லியனூர் வடக்கு தேரோடும் வீதி மற்றும் மேற்கு தேரோடும் வீதி சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை (NH 45A) புறவழிச்சாலை வரை ஆர்.சி.சி 'யூ' வடிவ வாய்க்கால் புனரமைப்பு அமைக்கும் பணி, பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 93.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர்கள் குலோத்துங்கன், தேவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சபரி, ராஜி, ஏழுமலை, சேகர், ரகுராமன், ரவி, மதி, ரமேஷ், அசோகன், சேகர், ஜெபஸ்டின், வெங்கட், ராபர்ட் சுப்பிரமணி, திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் , தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஊசுடு தொகுதி செயலாளர் இளஞ்செழிய பாண்டியன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஜெனா, மிலிட்டரி முருகன், வேதாசலம், சரவணன், ஹரி, கார்த்திகேயன், காசிநாதன், முத்து, பாலு, ராமஜெயம், அன்பு, கலைமணி, மூர்த்தி, வேலு, கிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
Oral cavity reconstruction work The opposition leader Siva inaugurated it