4 நாட்களுக்கு பின் தொடங்கிய ஊட்டி மலை ரெயில் சேவை! உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

கடந்த 3ஆம் தேதி நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழையினால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் செல்லும் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து, மண் சரிவு ஏற்பட்டு ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சீரமைப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்ததால் சீரமைப்பு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண் சரிவு மற்றும் மரங்கள் அகற்றப்பட்டது. 

இதன் காரணமாக கடந்த 4 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றுடன் சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது. 

அதன்படி இன்று காலை 7.10 மணி அளவில் மீணடும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலைக்கு ரயில் புறப்பட்டது.

இந்த ரயிலில் 186 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர். ஊட்டி மலை ரயில் சேவை 4 நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty mountain train service started after 4 days


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->