சென்னையில் உணவு விநியோக ஊழியர்களுக்காக சிறப்பான வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் உணவு விநியோக ஊழியர்களுக்காக சிறப்பான வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் முயற்சியாகும்.

முதற்கட்டமாக, அண்ணாநகர், கே.கே. நகர், மயிலாப்பூர் மற்றும் தி.நகர் போன்ற பகுதிகளில் சோதனை திட்டமாக இந்த ஓய்வறைகள் அமைக்கப்படவுள்ளன.

குளிர்சாதன வசதி, குடிநீர், மற்றும் இலகுவான இருக்கைகள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் இதில் இடம்பெறும்.

தனித்தனியாக 600 சதுர அடியில், 20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட அமைப்பில், ஒரே நேரத்தில் 25 பேர் ஓய்வெடுக்கக்கூடியதாகவும், 20 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் இந்த இடங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

உணவு விநியோகத்தில் உள்ள ஊழியர்களில் 10% பெண்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான ஓய்விடங்களை வழங்கும் நோக்குடன் மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

online food Delivery rest room in chennai


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->