போலீசார் ரோந்தில் சிக்கிய 7 கிலோ புகையிலை பொருட்கள்.. 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மற்றும் , கங்கைகொண்டான் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த  7 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது.இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கங்கைகொண்டான், துறையூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.இவர் ராஜபதி, கிழக்கு தெருவை சேர்ந்த மாசானம்என்பது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார்  மாசானத்தை கைது செய்தனர் . மேலும் அவரிடமிருந்து 2 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர் .

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், மானூர், நடுபிள்ளையார்குளம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சஜுவ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி நான்கு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.இவர்  நடுபிள்ளையார்குளம், வடக்கு தெருவை சேர்ந்த மகாராஜன் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது..இதனையடுத்து  மகாராஜனை போலீசார் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ 216 கிராம் புகையிலை பொருட்களையும் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 kilograms of tobacco products seized in a police raid 2 arrested


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->