சர்ச்சை பேச்சு!பெற்றோர்கள் முன் பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...! - வேல்முருகன் - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் ''வேல்முருகன்'' செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்ததாவது,"வயதுக்கு வந்த பெண்ணை தந்தை உள்ளிட்ட எந்த உறவும் மடியில் உட்கார வைக்கவோ, கட்டிப்பிடிக்கவோ மாட்டோம். கட்டிப்பிடிப்பது தமிழர் கலாசாரம் இல்லை.

ஆனால் விஜய் ரசிகர்கள் நீங்கள் அழைத்து வந்த பெண்கள், பெற்றோர்களை கொச்சைப்படுத்தியதற்கு நீங்கள்தான் என்னிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

நான் பேசியதில் என்ன தவறு உள்ளது என்பதை விஜய் என்னுடன் அமர்ந்து நேரடியாக கேள்வி கேட்கட்டும், அதில் அவர் தன்னை புண்படுத்தியுள்ளது குறித்து கூறட்டும். ஆனால் ஏன் அதற்கு அவர் முன்வரவில்லை.நான் சொன்ன முத்தமிடும் காட்சி விஜய் குறித்தோ, கல்வி நிகழ்ச்சி குறித்தோ தெரிவிக்கவில்லை.

எத்தனையோ பேர் நூற்றுக்கணக்கான மக்களுக்கு நிதி உதவி தந்து கல்விக்கு உதவுகின்றனர். அவர்கள் இதுபோன்று கல்வி நிகழ்ச்சி நடத்துகின்றனரா?. அரசியல் ஆதாயத்திற்காக விஜய் திட்டமிட்டே கல்வி நிகழ்ச்சியை நடத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

இது தற்போது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்த சர்ச்சையான பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversial speech You should apologize to me for insulting women in front of their parents Velmurugan


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->