உஷார் மக்களே!ஆரஞ்சு அலாட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு...!
Beware people Orange alert Tamil Nadu government orders to take precautionary measures
சென்னை வானிலை ஆய்வு மையம்," ஆந்திர பிரதேசம் வடக்கு கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதனால், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்,திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது " என்று தெரிவித்துள்ளது.
இதில் கூடுதலாக தமிழக அரசு, 'தமிழகத்தில் தேனி, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை,தென்காசி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மாவட்ட கலெக்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.இந்தக் காரணங்களால் சற்று பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
Beware people Orange alert Tamil Nadu government orders to take precautionary measures