#ராமநாதபுரம் || ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி கேட்கும் ஓஎன்ஜிசி.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதனை அடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய் உற்பத்தி கிணறுகள் அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசு மக்களிடம் கருத்து கேட்கக் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், காவிரி ஆற்றில் இருந்து கிணறு அமைவிடம் இடைப்பட்ட தூரம் குறித்தான விவரங்கள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ONGC seeks permission set up hydrocarbon well in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->