#ராமநாதபுரம் : தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொலை.! போலீசார் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தளிர் மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி (75). இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மேலும் இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி விட்டதால் ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டு முன்பு ஜெயசீலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதில் ஜெயசீலியின் தலையில் கல்லை போட்டும், கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. மேலும் முதற்கட்ட விசாரணையில் ஆடுகளை திருட வந்த சிலர் ஜெயசீலியை கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜெயசீலியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயசீலியை கொன்றது யார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old woman was killed by throwing a stone on her head in ramanathapuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->