பேருந்தில் ஏற முயன்ற முதியவர்.. சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் செல்வதற்காக நேற்று ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாபநாசம் செல்லும் ஒரு பேருந்து வந்தது.

அப்போது வீரவநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ஆறுமுகம் என்பவர் ஓடும் பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

இதில் ஆறுமுகத்தின் கால் மீது பேருந்து சக்கரம் ஏறி நசுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old man follow down in the bus and death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->