03 வயது குழந்தையுடன் கொத்தடிமையாக செங்கல்சூளையில் பணியாற்றிய ஒடிசா தொழிலாளர்கள்: திருவள்ளூரில் மீட்பு..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசாவை  சேர்ந்த 06 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த செங்கல் சூளையில், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி இவர்கள் 06 பபேரும் பணியாற்றி வருவதாக, வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட சட்டபணிகள் குழு செயலாளர் நளினிதேவி, மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் பொன்மலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.

இதில், ஓடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தை சார்ந்த சிபமாலிக் (30), விபஞ்சலி மாலிக் (25), பகாரட் நாக் (58), சாய்ரேந்திரி நாக் (45), ஹடுபரிகா (60), ஜென்ஹி பரிஹா (47) மற்றும் குழந்தை ஹாஹில் மாலிக் (3) ஆகியோர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முன்பணமாக ரூ.35 ஆயிரம் கொடுத்து செங்கல்சூளையில் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, தொழிலாளர் குடும்பங்களுக்கு வாரத்திற்கு 1000 செங்கற்களுக்கு ரூ.500 வீதம் குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கி உள்ளனர். அத்துடன் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட  மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லாமல் செங்கல்சூளையிலேயே வைத்து சிகிச்சை அளித்தும் வந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளதோடு,  இதுசம்பந்தபட்ட செங்கல்சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் செங்கல் சூளையின் கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், தொழிற்சாலைகள் சட்டம் 1948-இன் கீழ் முறையாக பதிவு செய்து உரிம் பெறவில்லை என்பதும், முறையான வருகை பதிவேடு, ஊதியப் பதிவேடு ஏதும் பராமரிக்கப்படவில்லை என்பதும் கண்டிப்பிடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செங்கல் சூளையில், கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை என மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். குறித்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்த போது, தங்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டு செல்லுமாறு தெரிவித்து மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் பாரட் நாக் என்பவர் தன்னுடைய மகன் அமிட் நாக் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரத்தை போன் பே மூலம் லோகநாதன் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ள்ளார். பின்னர் அந்த தொகையினை செங்கல் சூளை  நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு செங்கல் சூளை நிர்வாகத்திடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை திரும்ப பெற்று தொழிலாளர்களிடம் திரும்ப வழங்கியுள்ளதோடு, குறித்த 06 தொழிலாளர்களையும் மீட்டு காக்களூர் தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha workers who worked as bonded laborers in a brick kiln are rescued in Thiruvallur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->